இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்படியும் மனிதர்கள்

நாங்கள் நல்லவர்கள் , நல்ல மாதிரி என்று காட்டிக்கொள்ளவே மனிதர்களுக்கு பிடிக்கும், அதுவே யதார்த்தமாக கொள்ள படுகிறது. நான் ஆஸ்திரேலியா சென்ற போது,  என் அக்காவை பார்க்க  Sevem hill station, வரை சென்று, அதில் இருந்து சிறிது தூரத்தில் தான் அக்கா வீடு. என் பிரியமான பாசமான அக்காவை பார்த்து விட்டு திரும்பி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டு இருந்தோம். ஒரு 60 வயது மதிக்க தக்கவர் கொஞ்சம் கறுப்பு, (கறுப்பு இனத்தை சேர்ந்தவர் அல்ல ) இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதுசரி எந்த நாடாக இருந்தால் என்ன, அவரும் எங்களை பார்த்தார். நாங்களும் அவரை பார்த்தோம். அதில் என் கவனிப்பும் அதில் இருந்தது. அந்நேரம், கண் பார்வை இழந்த 14 வயது மதிக்க தக்க சிறுமி, white cane உடன் இன்னொரு பெண்ணின் உதவியோடு ரயிலை நோக்கி படிகளில் இறங்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள் .அவர்கள் வரவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. அவளை கூட்டி வந்த பெண் சிறுமி ரயில் ஏற வைத்து விட்டு திரும்பி போய்க்கொண்டு இருந்தாள் . எல்லோரும் ஏறிக்கொண்டோம் . எல்லோரும் என்றால் அந்த சிறுமி, அந்த 60 வயது மதிக்க தக்க மனிதர் , நான் என் கணவர்....

கனகு ஐயா

பலாலி வீதியையும், பருத்தித்துறை வீதியை நடுவில் இணைக்கும் பாலம் தான் அம்மன் வீதி . அது அம்மன் வீதி என்பதாலோ என்னவோ அந்த வீதியில் உள்ள எல்லா வீட்டிலும், வீட்டுக்கு இரண்டுக்கு என்று குறையாமல் கன்னிப் பெண்கள் இருப்பார்கள். அநேகமான வீடுகளில் பெண்களே அதிகம். வீட்டுக்கு வீடு பெண்கள். அதிலும் எல்லா பெண்களும் எதோ ஒரு விதத்தில் அழகிகள் தான். அம்மன் வீதியின் முடிவில் பருத்தித்துறை வீதியோடு ஒட்டி இருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில், அந்த கோயில் தான் எல்லா பெண்களின் ஆஸ்தான கோயில். ஊரில் ஒரு வாடிக்கை இரவில் எல்லோர் வீடுகளிலும் இரவு உணவு பலகாரம் தான், பலகாரம் என்றால் முறுக்கு, வடை, சீடை என்று நினைக்க கூடாது. அதிகம் அரிசி மாவை இடித்து செய்யப்படும், புட்டு, இடியப்பம், மற்றும் உளுந்தால் செய்யப்படும் தோசை, இட்லி என்பன. இந்த அரசி மா, அரிசியை ஊற வைச்சு ஒரு இரவு, அடுத்தநாள் இடித்து வைத்து கொள்ளவார்கள் ஒரே அடியாக. பின்னர் தான் பலகாரம் செய்வார்கள். இந்த அரிசிமாவை அநேகமாக யாரவது பெண்கள் வந்து சம்பளத்துக்கு இடித்து தருவார்கள். இதுதான் வழமை , பொதுவாக பெண்கள் தான் இந்த தொழிலை செய்து வந்தார்கள். நாங்கள் அறிய ம...