இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நயப்பட உரைத்தல்

 எல்லோருக்கும் நம்மோடு யார் பேசினாலும் பண்பாக, மரியாதையாக பேசினால் ரொம்பவே பிடிக்கும். அவர்கள் ஒரு உதவி கேட்டால்  கேட்டதற்கு அதிகமாகவே செய்து கொடுப்போம் காரணம் நயம் பட பேசுதல் தான். சின்ன குழந்தைகளை நாம் தூக்கி செல்லம் கொஞ்சி விளையாடும் போது பட்டு குட்டி, புச்சி குட்டி, செல்ல குட்டி என்று  எல்லாம் இல்லாத வார்த்தைகளை சொல்லி எங்கள் அன்பை வெளிக் கொணர்கிறோம் இல்லையா? குழந்தையும் மகிழ்ச்சியாக ஆரவாரமாக எங்களை கொண்டாடி மகிழ்கிறதே ஏன் அந்த மொழி புரிந்தா இல்லை, அதில் இருக்கும் கனிவு, சொல்லப்படும் விதம், அன்பு, எல்லாம் வார்த்தையில் காட்டும் அழகு.   நாங்கள் வளர்ந்த குழந்தைகள் அன்பை அதிகாரமாக, ஒரு ஆயுதமாக , கண்டிப்பாக சொன்னால், எங்களுக்கு அதை மகிழ்ச்சியாக செய்ய மனம் ஒப்புவது இல்லை. காரணம் அதை செய்ய சொல்ல படும் விதமே அன்றி வேறில்லை. எல்லோருக்கும் வேண்டியது, மரியாதை, பண்பு, அது சின்னவர் பெரியவர் என்ற வேறுபாடு பேதம் கிடையாது. "இதை செய், என்பதுக்கும் "தயவுசெய்து இதை ஒரு முறை செய்து தர முடியுமா " என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதிகார தோரணை யாருக்குமே பிடிப்...
படம்
நல்ல நட்பு வேண்டும், யாரையும் நம்ப முடியவில்லை. எல்லோரும் கள்ளர், இப்படி நிறைய முறைப்பாடுகள். முதலில் நல்லவரை நீங்கள் வெளியே தேட வேண்டாம், உங்கள் உள்ளே தேடுங்கள். நீங்கள் நல்லவரா, வல்லவரா இது ஒரு புலோவில் வந்து விட்டது. நீங்கள் நல்லவராக இருந்தால் மற்றவரும் நல்லவராகவே இருப்பார்கள் என்று முதலில் நம்ப வேண்டும். ஊர் முழுக்க நல்லவராக இருக்க வேண்டும் என்றால் புத்தரும், யேசுவும், காந்தியும் தான் நட்பாக இருக்க முடியும். எங்களிடம் நட்பு வைத்திருக்கும் எல்லோரும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும், பிரியமாகவும் தான் இருக்க வேண்டும் என்பதுக்கு எந்த உறுதியோ உத்தரவாதமோ இல்லை .ஆனால் நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் நல்ல நட்பை கொண்டவர்களாகவும் இறுதி வரை இருக்கலாம். அதற்கு நாங்கள் நல்ல நட்பை கொண்டவர்களாக இருக்க முடியும் , ஏன் உறுதியாக கூட சொல்ல முடியும். ஒரு நட்பின் சின்ன தப்பை பெரிசு படுத்துவதும் , கோபத்தை மனதில் வைத்து இருப்பதும், விட்டு கொடுக்காமல் இருப்பதும், எல்லாம் நட்பை பேண அடிப்படை தகுதிகள். நல்ல நட்பு என்பது ஒரு நாளில் கிடைப்பது இல்லை . அது சிற்பம் போன்றது கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி முழு சிற...

உள்ளுணர்வு

வாசுகியின் நடவடிக்கை விசித்திரமாக இருந்தது. வழமைக்கு மாறாக, அவள் 23 வயது நிரம்பிய காலேஜ் படிக்கும் பெண் என்பதை மறந்து ஒரு சின்ன குழந்தை போல குதூகலித்தாள் . இந்த குடும்பத்தில் இவள் தான் மூத்தவள் , இவளுக்கு இளையவள் ஒருத்தியும், ஒரு தம்பி இருக்கிறான். " அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க"என்று தனது உணவு தட்டை தூக்கி கொண்டு அம்மாவிடம் வந்தாள். வாசுகியின் நடவடிக்கை "என்னடி இது புதுசா இருக்கு" என்று சிரித்தபடி தட்டை வாங்கிக்கொண்டு ஒரு கவளம் உணவை மக்கள் வாயில் ஊட்டி விட்டபடி, சிரித்தாள் அம்மா பெரிமிதமாக . எப்படி வளர்ந்தாலும் அம்மாக்களுக்கு எப்பவும் குழந்தைகள் தான். அந்த வளர்ந்த குழந்தைகள் செல்லம் கொஞ்சும் போது அது, இன்னும் கொஞ்சம் அதிக மகிழ்ச்சியை கொடுக்கும். அதில் என்னவோ தனிப்பெருமை . “அம்மா அக்காவுக்கு லூசு போல இருக்கு” கிண்டல் பண்ணினாள் இளையவள். அப்பா மடியில் போய் இருந்து கொண்டு போனை நொண்டிய படி இருந்தாள் வாசுகி, விசித்திரமாக தம்பியும் தங்கையும் பார்ப்பதை வாசுகி அசட்டை பண்ணவே இல்லை. “ உனக்கும் ஆசையாக இருந்தால் நீயும் அம்மாவிடம் ஊட்ட சொல்லு, அப்பா மடியில் இரு “ என்றபடி...