நல்ல நட்பு வேண்டும், யாரையும் நம்ப முடியவில்லை. எல்லோரும் கள்ளர், இப்படி நிறைய முறைப்பாடுகள். முதலில் நல்லவரை நீங்கள் வெளியே தேட வேண்டாம், உங்கள் உள்ளே தேடுங்கள். நீங்கள் நல்லவரா, வல்லவரா இது ஒரு புலோவில் வந்து விட்டது. நீங்கள் நல்லவராக இருந்தால் மற்றவரும் நல்லவராகவே இருப்பார்கள் என்று முதலில் நம்ப வேண்டும். ஊர் முழுக்க நல்லவராக இருக்க வேண்டும் என்றால் புத்தரும், யேசுவும், காந்தியும் தான் நட்பாக இருக்க முடியும். எங்களிடம் நட்பு வைத்திருக்கும் எல்லோரும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும், பிரியமாகவும் தான் இருக்க வேண்டும் என்பதுக்கு எந்த உறுதியோ உத்தரவாதமோ இல்லை .ஆனால் நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் நல்ல நட்பை கொண்டவர்களாகவும் இறுதி வரை இருக்கலாம். அதற்கு நாங்கள் நல்ல நட்பை கொண்டவர்களாக இருக்க முடியும் , ஏன் உறுதியாக கூட சொல்ல முடியும். ஒரு நட்பின் சின்ன தப்பை பெரிசு படுத்துவதும் , கோபத்தை மனதில் வைத்து இருப்பதும், விட்டு கொடுக்காமல் இருப்பதும், எல்லாம் நட்பை பேண அடிப்படை தகுதிகள். நல்ல நட்பு என்பது ஒரு நாளில் கிடைப்பது இல்லை . அது சிற்பம் போன்றது கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி முழு சிற்பமாக மெருகு பெற காலம் செல்லும். அதுக்கு பொறுமையும், நம்பிக்கையும் வேண்டும். நல்ல நட்பு என்பது முதலில் நாங்களாக இருக்க வேண்டும், நீட்டும் கரங்கள் முதலில் நல்ல நட்புக்கு போலித்தனம் எனும் முகமூடியை கழற்றி வைத்து விட்டு சுத்தமாக இருந்தால் எல்லாம் நலமே அமையும் நட்பு உட்பட ![]()
அவள் பெயர் கண்ணு , அவளை நான் சந்தித்தது கொழும்பில், வெள்ளவத்தையில் தான். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவோருக்கு எல்லாம் குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தை தான் காரணம் மொழிப் பிரச்சனை இல்லாமல் ஓரளவு சமாளிக்க கூடிய இடம் என்றால் இந்த பகுதி என்றால் மிகையாகாது. ஏனைய இடங்களில் சிங்களம் அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனக்கு எந்த மொழி தடங்கல் இல்லாத போதும் ஒரு தற்காலிக பாதுகாப்புணர்வு தந்தது இந்த வெள்ளவத்தை. நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ஒரு தமிழர். மிகவும் உதவி மனப்பான்மை மிக்கவர். அவருக்கு வயது வந்த பெண் குழந்தைகள் இருப்பதால் எந்த ஆண்களுக்கும் வாடகைக்கு கொடுப்பதில்லை என்பது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என அங்கு உள்ளவர் மத்தியில் ஒரு நம்பிக்கை. அங்கே தான் கண்ணு ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க, அவள் பத்து வயது மகன் கண்ணன். பெயருக்கேற்ற கண்ணன் குழப்படி செய்வதில். கண்ணு அப்படி ஒன்றும் அழகி கிடையாது.எப்போதும் முகத்தில் ஒரு கடுகடுப்பு, அழகு என்று சொல்ல தன்னை அலங்கரித்து கொண்டதில்லை.சிக்கல் நிறைந்த கூந்தலை அள்ளி முடித்தபடி, எப்போதும் கண்ணன் உடன் மல்லுக்கட்டி...
கருத்துகள்
கருத்துரையிடுக