இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் பார்வைகளை பரிசுத்தமாகும் வார்த்தைகள் கனிவாகும் குறைகள் மறையும் நிறைகள் தெரியும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் மன்னிப்பு கேட்கவும் மண்டியிடவும் வைக்கும் ஈகோவை இளக செய்யும் கொழுப்பை கரைக்கும் நீயும் நானும் ஒன்றே என்று சொல்லும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் வலிகளை துச்சமென எண்ணும் நம்பிக்கைதனை வலுவாக நம்பும் போராட கற்றுக்கொடுக்கும் பொறுமையை போதிக்கும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் சிறகுகள் இல்லாமல் பறக்க தோன்றும் பசி மறக்கும் உற்சாகம் கொடுக்கும் உலகம் அழகாக தெரியும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் பகைமை மறையும் கோபம் குறையும் பிரியம் நிறையும் ரசனைகள் பெருகும் கவிதைகள் பிடிக்கும் கற்பனை வளரும் எழுத தோன்றும் நேரம் குறையும் காதல் நிறையும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

டெக்னாலஜி

முன்பெல்லாம் எதோ காரணத்துக்காக மாதம் ஒருமுறை வைத்தியரை பார்க்க வேண்டும் எல்லோருக்கும், அவர்களை பார்க்கவில்லை என்றால் வருத்தம் முத்தி செத்து போவார்கள். அப்படி இருக்கும் பேச்சு. ஆனால் இப்ப யாருக்கும் வைத்தியரை பார்க்க எண்ணமே வருவது இல்லை, ஏன் உங்களுக்கு அந்த அப்பொய்ன்ட்மென்ட் இருக்கே போய் வருவோம் என்றால் கூட மாட்டோம் என்று காத தூரம் ஓடுகிறார்கள் . இந்த கறி சாப்பிட மாட்டோம், அது சாப்பிட மாட்டோம் என்றவர்கள் எல்லாம் இப்ப எதுவும் சாப்பிடுகிறார்கள். அது வாயு , இது வயிற்று பொருமல், இது சேமிக்காது , அந்த வார்த்தைகளை இப்ப கேட்கவே முடியவில்லை. முடி வெட்டவில்லை, டை அடிக்கவில்லை என்று பியூட்டி பார்லோர் போனவர்கள் எல்லாம், இப்ப அவற்றை மறந்து , வாழ பழகி கொள்கிறார்கள். வெளியில் போகவில்லை என்றால் மண்டை காய்ந்து போகிற பலர் இப்போ வீட்டில் எப்படி பொழுதை போக்குவது என்ன செய்யலாம். என்று அட்டவணை போட்டு வாழ பழகி விட்டார்கள். வீட்டு தோட்டம், வீட்டை சுத்தம் செய்வது, தையல், உடல் பயிற்சி, இந்த டெக்னாலஜி ஒரு பக்கத்தில் பாரிய உதவியை செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் பொழுதை போக அதே நேரம் இல்லாத பீதியை வேற கிளப்பி கொண...

நம்பிக்கை

யாரையும் நம்புங்கள் தப்பே இல்லை, ஆனால் அதி தீவிரமாக நம்பாதீர்கள். அது உங்களை தீராத துன்பத்தில் தள்ளும், யாரும் உங்களை கண்மூடித்தனமாக நம்ப சொல்வதில்லை , உங்கள் பிரியம் தான் அளவு கடந்த நம்பிக்கையாக பரிணமிக்கிறது. ஆனால் அதே போல அதே அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் அவர்களும் பாத்திரமாக இருக்க வேண்டாமா. அப்படி எல்லோராலும் இருக்க முடியுமா என்ன. உலகில் விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு தான் அப்படி நம்பிக்கையான அதிசயங்கள் நிகழும். எல்லோருக்கும் ஆசை தான் நாங்கள் நம்புபவர்கள், நம்பிக்கை வைப்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று, ஆனால் என்ன மலை போல் நம்பி இருப்போம், எதிர்பார்க்காத அந்த ஒரு கணத்தில் நம்பிக்கை எனும் கோட்டை விழுந்து தவிடு பொடியாகி விடும். இப்படி தவிடு பொடியாகும் வரிசையில் பெற்றோர் பிள்ளைகளை நம்பி உடைந்து போய் இருக்கிறார்கள், பெற்றோர்கள் பிள்ளைகள் என்று எப்படியோ ஜீரணித்து விடுகிறார்கள். ஆனால் இந்த காதலன் காதலி ரகம் இருக்கே இது தான் உலகின் கணக்கு வழக்கு இல்லாமல் ஏமாந்து ,நம்பிக்கைகள் தகர்ந்து போகும் அதிகமானவர்கள். மற்றது நட்பு நம்ப வைத்து கழுத்து அறுத்து விடுவார்கள். ...

மனிதன்

மனிதன் ஒரு விலங்கு இனம் தான் ஆனால் அந்த விலங்கு இனத்துக்கு இல்லாத அபூவர்வ சக்தி மனிதனிடம் இருக்கு . தனக்கு தேவையான போது பாராட்டி பேசி தேவையை தீர்த்து கொள்வதும் தேவை முடிந்ததும் மறந்து தூக்கி எறிந்து விட்டு போவதும் தான். தவறுகள் குற்றங்கள் செய்வது மனித இயல்பு . அவற்றை மன்னிப்பதும் , கொலை , கொள்ளை எனும் போது அதற்குரிய சிறை தண்டனையை அனுபவித்து வெளியே வருவதும் தான். தண்டனை என்பது அவனுக்கான பழி வாங்கல் அல்ல, அவன் திருந்துவதற்கான கால அவகாசம் என்றே கொள்ள வேண்டும். அதற்கான நேரமும் , மனமாற்றத்துக்கான காலமும் மட்டுமே எதையும் மாற்ற வல்லது. மற்றும்படி ஏனைய தவறுகள் குற்றங்கள் , நாம் திருந்தி கொள்ள வாழ்க்கை ஒரு களமாக இயங்குகிறது. வாசித்தல் , பொது சாதன தொடர்புகள், மீடியாக்கள் எல்லாம் நல்லவற்றை சொல்ல விளைவுதான் நோக்கமே கெட்டதை சொல்லி , பின்னர் நல்லதுக்கான வழிகளை சொல்லி முடிகிறது . நேர்மையான எண்ணங்கள் யாரையும் விரைவில் கவர்வதே இல்லை. எதிர்மறையான நிகழ்வுகள் பேச்சுக்கள் ஈர்க்கும் அளவுக்கு. ஆனால் மனிதர் என்ன செய்கிறார்கள்? அவற்றில் நல்ல விடயங்களை விட , எவை எல்லாம் செய்ய தகாதோ அவை மிக விரைவில் மனதை கவர்ந்...

அந்த ஒரே ஒரு ஆசை

அந்த ஒரே ஒரு ஆசை சொல்ல முடியாத , அந்த ஒரே ஒரு ஆசை எல்லோர் ஆழ் மனதிலும் உண்டு. எதோ ஒரு காரணம் அதை சொல்லிட விடாமல் தடுக்கும். என்றோ ஒரு நாள் அதை சொல்லிட வேண்டும் என்று சகலர் மனதிலும் எண்ணம் ஒன்று இருக்கும். ஆனால் என்ன அதற்கான நேரமும் காலமும் கூடி வரும் என்று காத்திருப்பார்கள். காதல், கோபம், எரிச்சல் பொறாமை, பெருந்தன்மை , ஏதோ ஒன்று. சொல்ல முடியாது என்று எதுவுமே இல்லை. இதை சொல்வதால், எதோ ஒரு விதத்தில், அவர்கள் இமேஜ் உடைந்து போகலாம் என்ற தயக்கம், அச்சம், பயம், விளக்கிட முடியாத ஒன்று உள்ளே இருக்கும். யோசித்து பார்த்தால் , உங்களுடன் கூட வாழ்ந்த பெற்றோர், கணவன் , மனைவி, குழந்தைகள், நண்பர்கள் , உறவினர்கள், சகோதரர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த தருணம் வரும் வரை பலர் காத்து இருக்கிறார்கள். என்ன பலநேரம் அந்த சந்தர்ப்பம் வராமலே போய் விடும். அப்படி போவதால் ஒன்றும் நட்டமே இல்லை. சொல்ல முடியாமல் இருக்க என்ன காரணமோ இருந்தது என்றால் அதை சொல்லாமல் போவதில் பாதிப்பே இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஹா மறந்து போனேன் இதை எழுதவே காரணம் இந்த சம்பவம் தான், என் தோழியின் பெற்றோர் , இவர்களை எல...