இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகானவை

காட்சி ஒன்று தான் ஆனால் என்ன ஆளுக்கு ஆள் மாறுபட்ட சிந்தனைகள் தோன்றும், கற்பனைகள் உருவாகும். அந்த சிந்தனை எண்ணம் எல்லாம் சரியாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை, அப்படித்தான் எனக்கு தெரிந்த மொழியில் பாஷையில் இந்த மலையை காணும் போது சிந்தனை தோன்றியது. Squamish, Sea to sky, என்ற சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து போகும் இடங்களில் மற்றும் ஒன்றான Whistler, Blackcomb. இங்கு வாழும் மலையும் , மலை தொடர்களும் அப்படி தான் சொல்ல தோன்றுகிறது, ஆண்டாண்டு காலமா இருக்கிறது, அது எப்போது தோன்றியது, அதற்கான வரலாறு வேண்டுமானால் சரித்திரங்கள், ஆய்வுகள் சொல்லாம், அந்த அறிவியல் அல்லது விஞ்ஞானம் . ஆனால் எனக்கு என்னவோ அந்த மலைகளையும் அதன் தொடர்களையும் காணும் போது மனதில் தோன்றியது எல்லாம், அந்த மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்று. அதில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், அது அவரவருக்கு ஏற்ப எண்ணங்கள் மாறலாம். எதையும் காணும் போதும் அதில் நல்லவற்றை காண்பதே மனதுக்கும் சிந்தனைக்கும் சிறந்தது, குறைகள் இல்லாமல் எதுவும் இல்லை, ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த மலை வழிச்சு துடைச்சா போல இருந்தால...

அப்பா

ஜானு கோபமாக போய் அடித்து கதவை சாத்திக்கொண்டாள் . அவள் போன திக்கையே பார்த்துக்கொண்டு நின்றார் கந்தசாமி. "என்னப்பா யோசிக்கிறீங்க , விடுங்கோ , நாங்கள் இந்த நாட்டுக்கு வந்தது பிழை, பிள்ளைகள் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுவார்கள் என்று யார் கண்டது " அம்மா சரசு அலுத்துக் கொண்டாள் . "இல்லை சரசு, அதுக்காக நான் வருத்த படவில்லை. ஜானு என்ன சொன்னாலும் எல்லாத்தையும் தாங்கி அவளை கரை சேர பண்ணி விட வேண்டும், அதுதான் எங்கள் கடமை, அவளை தன் சொந்தக்காலில் நிற்க பண்ண வேண்டும் , அது ஒன்று தான் என் ஆசை " என்றார் கந்தசாமி . நந்தன் அவன் தான் கந்தசாமி சரசு தம்பதிகளின் முத்த மகன், அவன் ஏஜென்ட் மூலம் களவாக கனடா வந்து, அகதியாக இருந்து , பெற்றோரையும் தங்கை ஜானுவையும் இங்கே ஸ்பான்ஸர் பண்ணி அழைத்து இருந்தான், வந்த பெற்றோர்களும் சும்மா இருக்கவில்லை, கடுமையாக இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள், கிளீனிங், கேட்டரிங் , டிஷ் வாஷிங் என்று ஓடி ஓடி உழைத்து இந்த அழகான வீட்டை, டொரொன்றோ மாநகரத்தில் வாங்கி விட்டு இருந்தார்கள். ஜானு வளரும் போது கொஞ்சம் வசதியும் சேர்ந்து கொண்டது மட்டுமில்லை. ஜானு அழகியாக மட்டுமில்லை...

ஞானம்

ஞானம் என்றால் என்ன? எங்களை நாங்கள் பக்குவப்படுத்திக் கொள்வது, எங்களை நாங்கள் நாங்கள் பக்குவப்படுத்தி கொள்வதன் நோக்கம் என்ன.யாரையும் நாங்கள் காயப்படுத்த கூடாது, யாருடைய தப்பையும் பெரிசு படுத்த கூடாது . அவற்றை எல்லாம் இது வாழ்வில் கடந்து போக வேண்டிய நிகழ்வுகள் என்று எண்ணும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது . எங்களை நாங்கள் நேர் வழிகாட்டலில் கொண்டு செல்வது, வாழ்வில் எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்காமல் வாழ கற்றுக்கொள்வது. எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை கொடுக்கும், அந்த ஏமாற்றம் தான் வலியை கொடுக்கும் , அந்த வலிகள் வராமல் இருக்க வழியை தேடிக்கொள்வது தான் இந்த பக்குவ படுத்திக்கொள்ளல் . இவ்வுலகில் யாரையும் நாம் திருத்த முடியாது, யாரையுமே நாங்கள் சிருஷ்டிக்க இல்லை. அது கடவுளாலே முடியாத போது . நாம் பெற்ற குழந்தைகளையே கட்டுப்படுத்த முடியாது, அதுவே வாழ்வின் நிதர்சனம். நாம் எம்மை திருத்திக்கொள்வது , எம்மை நாம் மாற்றி அமைப்பது , எம்மை நாம் பக்குவ படுத்தி கொள்வது எல்லாம் ஞானம். உலகில் யாரையும் திருத்த ஞானம் முக்கியம் அல்ல, இந்த சிக்கல் நிறைந்த உலகில், சிக்கலே இல்லாமல் வாழ பழகுவது தான் ஞானம். எரிச்சல் , க...
இரவு ஒரு மணி இருக்கும், நவரச என்ற சில எபிசொட்களை நெட்ப்பிலிக்ஸில் படம் பார்த்து விட்டு, கதவுகள் எல்லாம் சரியாக பூட்ட பட்டு இருக்கா , அலாம் எல்லாம் ஓன் பண்ணியாச்சா என்று கீழே இறங்கி போய் பார்த்தேன், அதுவும் பிரான்சில் தாய், மகள் என்று கொள்ளை அடிக்க போன இடத்தில் கொலை எல்லாம் வாசித்தேனா அதன் தாக்கம் வேற. எல்லாம் சரி பார்த்துக்கொண்டு மேலே வந்த நான் மெதுவாக யன்னல் வழியாக எட்டி பார்த்தேன். அங்கே ஒரு உருவம் மெதுவாக எங்கள் கேட்டை தாண்டி நின்று கொண்டு இருந்தது. கருப்பு பாண்ட்ஸ் , கருப்பு நிற ஹூடி தலையை சேர்த்து மூடிக்கொண்டு இருந்தது. மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது ,கால் இருக்கா என்று ஊர்ஜித படுத்திக்கொண்டேன். எந்த வீட்டை போவது என்று யோசித்து கொண்டு இருப்பது போல இருந்தது, சரியாக எந்த வீட்டினுள் நுழைவது என்று தீர்மானிக்காத மாதிரியும் இருந்தது. ஒரு டாக்ஸி வந்து யாரையோ இறக்கி விட அந்த உருவம் தெருவோரத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து கொண்டது மட்டுமில்லாமல் மெதுவாக எங்கள் வீட்டின் மேல் மாடி யன்னலை பார்த்தது, யாரவது பார்க்கிறார்களா என்று ,லேசாக ஒரு சின்ன வெளிச்சம், ஒளி என் பிள்ளை...